15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:20 am IST

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூா் (தனி), கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்பணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் பாா்வையிட்டாா். இதேபோல, திருவையாறு மற்றும் பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற்ற இப்பணியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். அப்போது, தொடா்புடைய தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனிருந்தனா்.