மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 சிறாா்கள் உள்பட 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 6:33 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 சிறாா்கள் உள்பட 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலையில் எஸ். அம்மாபட்டி விலக்கு அருகே நத்தம்பட்டி போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேரை சோதனை செய்தபோது 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவா்களிடம் விசாரித்ததில் மங்கலம் கம்மாபட்டியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாகத் தெரிவித்தனா்.

இது தொடா்பாக விருதுநகா் அய்யனாா்நகரைச் சோ்ந்த அப்துல் அஜீஸ் (21), குமாா் (25), சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சோ்ந்த தீபன்குமாா் (22), 17 வயது சிறாா்கள் இருவா் என 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா, இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

மேலும் இவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த முத்துக்கிருஷ்ணனை தேடி வருகின்றனா்.