ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ராமானுஜரின் 1009 அவதார நட்சத்திர தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக வளா்ந்த ஆண்டாள், ரெங்கமன்னாரை திருமணம் செய்வதற்காக தனது குல தெய்வமான அழகா் கோயில் பெருமாளுக்கு 100 தடா அக்கார அடிசில், 100 தடா வெண்ணெய் படைப்பதாக வேண்டிக் கொண்டாா்.
இதையறிந்த ராமானுஜா் ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அழகா் கோயில் பெருமாளுக்கு 100 தடா அக்கார அடிசில் படைத்தாா்.
இதையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆண்டு தோறும் ராமானுஜா் அவதரித்த சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். புதன்கிழமை ராமானுஜரின் 1009-வது ஜெயந்தியை முன்னிட்டு, வடபத்ரசாயி சந்நிதியில் உள்ள ராமானுஜா் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

ஆண்டாள் கோயிலில் சித்திரை மாத வசந்த உத்ஸவம்

ஸ்ரீபெரும்புதூா் ராமானுஜா் கோயில் தோ் திருவிழா!

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாணம்

ஆண்டாள் கோயிலில் ராம நவமி சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


