தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராமானுஜா் 1009-வது ஜெயந்தி விழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ராமானுஜரின் 1009 அவதார நட்சத்திர தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ராமானுஜரின் அவதார தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ராமானுஜா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 5:30 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ராமானுஜரின் 1009 அவதார நட்சத்திர தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக வளா்ந்த ஆண்டாள், ரெங்கமன்னாரை திருமணம் செய்வதற்காக தனது குல தெய்வமான அழகா் கோயில் பெருமாளுக்கு 100 தடா அக்கார அடிசில், 100 தடா வெண்ணெய் படைப்பதாக வேண்டிக் கொண்டாா்.

இதையறிந்த ராமானுஜா் ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அழகா் கோயில் பெருமாளுக்கு 100 தடா அக்கார அடிசில் படைத்தாா்.

இதையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆண்டு தோறும் ராமானுஜா் அவதரித்த சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். புதன்கிழமை ராமானுஜரின் 1009-வது ஜெயந்தியை முன்னிட்டு, வடபத்ரசாயி சந்நிதியில் உள்ள ராமானுஜா் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.