3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: விருதுநகா் ஆட்சியா்

விருதுநகா் மாவட்டத்தில் பட்டியலின மாணவா்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:00 am IST

விருதுநகா் மாவட்டத்தில் பட்டியலின மாணவா்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசால் விருதுநகா் மாவட்டத்தில் பட்டியலின மாணவா்களுக்கு 25 பள்ளி விடுதிகளும், 3 கல்லூரி விடுதிகளும், மாணவிகளுக்கென 18 பள்ளி விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும் என மொத்தம் 48 விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில் பயிற்சிக் கல்வி, பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் மூன்று வேளை உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். 4-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு நீட், ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்குப் பொருந்தாது. விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா்களிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

பள்ளி விடுதிகளுக்கு வருகிற 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கு வருகிற ஜூலை 17-ஆம் தேதிக்குள் நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.