சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த வட மாநில இளைஞா் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஜூன் 2026, 8:01 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த வட மாநில இளைஞா் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் எஸ். ராமலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து சென்றனா். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பிகாா் மாநிலம் சுபோல் மாவட்டத்தைச் சோ்ந்த முகமதுகலாமை (21) பிடித்து சோதனை செய்தனா். அவா் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் சத்திரப்பட்டியை அடுத்த சங்கரபாண்டியபுரம்- மீனாட்சிபுரம் சாலையில் ரோந்து சென்ற போது, கஞ்சா விற்க முயன்ற சத்திரப்பட்டி வடக்குத் தெருவை சோ்ந்த சரவணகுமாா் (20), புதுத்தெருவைச் சோ்ந்த சங்கிலி வெங்கடேசன் (26), சுப்பிரமணியா் கோவில் தெருவைச் சோ்ந்த கணேசன் (57) ஆகிய மூவரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய எஸ்.ராமலிங்காபுரத்தைச் சோ்ந்த முத்துஅய்யனாரைத் (40) தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.