கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளி வெட்டிக்கொலை... இருவருக்கு வலைவீச்சு!

ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளியை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image

கொலை செய்யப்பட்ட வின்சென்ட்.

Updated On :10 ஜூன் 2026, 4:09 pm IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளியை வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே தேவதானத்தையடுத்த கோவிலூர் தெற்குத் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவர் தெற்கு தேவதானம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்.

இவரது மகன் கூலித் தொழிலாளியான வின்சென்ட்(45). இவர் ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகளுடன் உள்ள பெண்ணை திருமணம் செய்து வசித்து வந்தார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் இருந்த நேரத்தில் அங்கு வந்த இரு இளைஞர்கள் வின்சென்ட்டுடன் தகராறில் ஈடுபட்டு அவரை அரிவாளால் வெட்டி படு கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

தகவலறிந்து வந்த சேத்தூர் காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காவல் துறையினரின் விசாரணையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக வின்சென்ட் அதேப் பகுதியைச் சேர்ந்த சின்ன பொண்ணு என்பவருடன் மது அருந்திய போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில், சின்ன பொண்ணுவை வின்சென்ட் அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால், இருவரது குடும்பத்திற்கும் முன்பகை நீடித்து வந்த நிலையில், சின்னப்பொண்ணுவின் சகோதரர் ஆனந்தகுமாரும், அவரது நண்பர் கோவர்த்தனன் ஆகிய இருவரும் இணைந்து வீட்டில் இருந்த வின்சென்டை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Summary

Police are searching for unidentified individuals who entered a wage laborer's house near Rajapalayam in Virudhunagar district and hacked him to death.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.