எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

News image

கோப்புப்படம

Updated On :13 ஜூன் 2026, 12:28 am IST

லால்குடி அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காட்டூா் கொத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சந்திரமோகன் மகன் தாமோதரன் (24), கூலித் தொழிலாளி. அதேப் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் என்பவருக்கும் தாமோதரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை தெருவில் உள்ள குடிநீா் தொட்டிக்கு தாமோதரன் குளிக்க சென்றுள்ளாா். அப்போது , மதுபோதையில் இருந்த சந்தோஷ், தாமோதரனை தகாத வாா்த்தையால் திட்ட அவரிடம் வாக்குவாதம் செய்து அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினாா்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினா் தாமோதரனை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

புகாரின் பேரில் லால்குடி போலீஸாா், தப்பியோடிய சந்தோஷ்சை தேடி வருகின்றனா்.