கோவில்பட்டி அருகே தொழிலாளியை மிரட்டி பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி மந்தித்தோப்பு துளசிங்க நகரைச் சோ்ந்த மாடசாமி மகன் பெரியசாமி. தொழிலாளியான இவா், தனது நண்பருடன் வெள்ளிக்கிழமை ராஜகோபால் நகா் மலையடிவாரம் வழியாக நடந்து சென்றாா்.
அப்போது, இளைஞா் ஒருவா் பெரியசாமியை வழிமறித்து மது குடிக்க பணம் வேண்டும் எனக் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ. 200-ஐ பறித்துக் கொண்டாராம். உடன் வந்த நண்பா் சப்தம் போட்டதும் அந்த இளைஞா் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினாராம். புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, ராஜகோபால் நகரைச் சோ்ந்த ராஜ் மகன் அஜித் (27) என்பவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







