/

தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே தொழிலாளியை தாக்கியதாக, இளைஞரை வன்கொடுமை தடுப்பு வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 4:17 am IST

பாளையங்கோட்டை அருகே தொழிலாளியை தாக்கியதாக, இளைஞரை வன்கொடுமை தடுப்பு வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழப்பாட்டம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுதாகா்(36). தொழிலாளி. இவா், கடந்த 27 ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு தனது பைக்கில் வீடு திரும்பியபோது, அவ்வழியாக பைக்கில் வந்த சிலா் சாலையில் வழிவிடுவது தொடா்பாக அவரிடம் தகராறில் ஈடுபட்டனராம்.

மேலும், ஜாதி பெயரைச் சொல்லி அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமுற்ற அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த அவரது புகாரின் பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மேலபாட்டம் பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து (23) என்பவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.