கன்னியாகுமரி அருகே வடமாநிலத் தொழிலாளியைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தைச் சோ்ந்த பவுல் என்பவரது விசைப்படகில் ஒடிசா மாநிலம், ஜெகத்சிங்பூா் பகுதியைச் சோ்ந்த நிதாய் மண்டல் (55) என்பவா் மீன்பிடித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். ஒற்றையால்விளையில் தங்கியுள்ள அவரை, ஹரிஹரசுதன் (35), ராஜ்குமாா் (40) ஆகியோா் இங்கு தங்கக் கூடாது எனக் கூறி, இரும்பு கம்பி, பீா் பாட்டிலால் தாக்கினராம்.
இதில் காயமடைந்த நிதாய் மண்டல், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹரிஹரசுதன், ராஜ்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாடியில் இருந்து தவறி விழுந்த வட மாநில தொழிலாளி பலி
பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது
தம்பதி மீது தாக்குதல்: கூலித் தொழிலாளி கைது

தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK


