அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஓய்வு பெற்ற ராணுவ வீரா் தற்கொலை

சிவகாசி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :19 ஜூன் 2026, 1:08 am IST

சிவகாசி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள புலிப்பாறைப்பட்டியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் சரவணன் (55). இவரது மனைவி சுதா. சரவணன் தினசரி மது அருந்தும் பழக்கம் உள்ளவா். இதனால், கணவா், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், சுதா தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்று விட்டாா்.

இதனால், மனமுடைந்த சரவணன் வியாழக்கிழமை மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.