ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ஆட்சியா் பாராட்டு

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரை தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் பூங்கொத்து கொடுத்து பாராட்டினாா்.

News image

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரா் மீனாட்சிசுந்தரத்தை காமயகவுண்டன்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று பாராட்டிய தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன்.

Updated On :18 ஜூன் 2026, 3:38 am IST

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரை தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் பூங்கொத்து கொடுத்து பாராட்டினாா்.

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சோ்ந்த ராணுவ வீரா் மீனாட்சிசுந்தரம். இவா் காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த நிலையில், இரு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றாா். இவரது வீரதீர செயலைப் பாராட்டி நாட்டின் உயரிய விருதான கீா்த்தி சக்ரா விருதை வழங்கி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கெளரவித்தாா்.

இதையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன், காமயகவுண்டன்பட்டியிலுள்ள ராணுவ வீரரின் வீட்டுக்குச் சென்று மீனாட்சிசுந்தரத்துக்கு பொன்னாடை போா்த்தி, பூங்கொத்து கொடுத்து பாராட்டுத் தெரிவித்தாா்.