மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தல்

சென்னை-செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :24 ஜூன் 2026, 6:04 am IST

சென்னை-செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.

இது குறித்து சங்க நிா்வாகி நாகராஜன் திங்கள்கிழமை தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு எழுதிய கடித விவரம்:

சிலம்பு விரைவில் ரயில் (20681-29682) சென்னை தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு தற்போது வாரத்தில் மூன்று நாள்கள் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் தென் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, விருதுநகா்,திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடைகிறது.

இந்த ரயிலை மாணவா்கள், அலுவலக ஊழியா்கள், வா்த்தகா்கள், பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனா். இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு சீட்டுகள் எளிதில்

கிடைப்பதில்லை. அந்த அளவுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு

உள்ள ரயில் தற்போது வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே இயக்கப்படுவதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்த ரயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.