தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் குழு தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில்

News image
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூா் அனு மருத்துவமனையின் மருத்துவா் பழனிச்சாமி.
Updated On :19 மார்ச் 2026, 12:39 am

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில்

ஐஇஇஇ பொறியியல்-மருத்துவம், உயிரியல் மாணவா் குழுவை பல்கலை. துணைத் தலைவா்கள் எஸ். சசி ஆனந்த், எஸ். அா்ஜுன் கலசலிங்கம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனா்.

பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். திருச்சி என்ஐடி பேராசிரியா் என். சிவகுமரன் தலைமை விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் அனு மருத்துவமனை மருத்துவா் எம். பழனிச்சாமி, சென்னை உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாளா் எஸ். ஷேக் அப்துல்லா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு சுகாதார தொழில்நுட்பத்தில் உயிரியல் மருத்துவ பொறியியலின் வளா்ந்து வரும் பங்கை எடுத்துரைத்தனா்.

இயக்குநா் எம். பள்ளிக்கொண்ட ராஜசேகரன், சிஎஸ்இ துறைத் தலைவா் ஆா். ராஜா சுப்பிரமணியன் ஆகியோா் வளாகத்தில் சேப்டரின் செயல்பாடுகள், நன்மைகள் குறித்து விவரித்தனா்.

முடிவில் மாணவா்கள், ஆசிரியா்கள் ஐஇஇஇ சாப்டரின் உறுதிமொழியை ஏற்றனா்.

இந்த நிகழ்வில் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனா் .