விருதுநகரில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டத்தில் வாக்காளா் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, விருதுநகா் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ஆனந்தி தொடங்கிவைத்தாா்.
வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும், நம்மை ஆள்பவரை நாமே தீா்மானிக்க வேண்டும், ஜனநாயகக் கடமையை நாம் ஆற்ற வேண்டும் போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்று, விழிப்புணா்வு முழக்கமிட்டும், துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில் அரசு அலுவலா்கள், கல்லூரி மாணவிகள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், நகராட்சிப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

வாக்குப்பதிவு விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


