நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊழியருக்கு கரோனா: கொள்ளிடம் ஒன்றிய அலுவலகம் மூடல்

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அந்த அலுவலகம் திங்கள்கிழமை மூடப்பட்டது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 7:37 pm

DIN

சீா்காழி: கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அந்த அலுவலகம் திங்கள்கிழமை மூடப்பட்டது.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளா் ஒருவருக்கு கடந்த புதன்கிழமை செய்யப்பட்ட கரோனா பரிசோதனை முடிவு திங்கள்கிழமை வெளியானது. இதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதால், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஒருநாள் விடுமுறை அறிவித்து, அலுவலகம் மூடப்பட்டது. மேலும், அருகில் உள்ள வட்டார கல்வி அலுவலகம், வட்டார சேவை மையம் ஆகியவைகளும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன.

இதேபோல, புதுப்பட்டினம் தேசிய வங்கி கிளை ஒன்றில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அந்த வங்கிக் கிளையும் மூடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.