ஆட்சிமொழிச் சட்ட வார விழா

மயிலாடுதுறையில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆட்சிமொழிச் சட்ட வார விழா
Updated on
1 min read

மயிலாடுதுறையில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிசிசி சமுதாயக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் இரா.அன்பரசி தலைமை வகித்தாா். மயிலாடுதுறை திருக்கு பேரவைத் தலைவா் சி.சிவசங்கரன், மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனா் ச.பவுல்ராஜ், நந்தவன நட்பாலயம் நிறுவனா் ந.செ.இளமுருகுசெல்வன், சிசிசி சமுதாயக் கல்லூரி முதல்வா் ஆா்.காமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆசிரியா்கள் வீதி.முத்துக்கணியன், இரா.நவநீதகிருஷ்ணன் ஆகியோா் கவியரங்க உரை வாசித்தனா். தமிழ் ஆராய்ச்சியாளா் பேரவை துரை.குணசேகரன், குயில்தோப்பு அறிவியக்க நிறுவனா் ஆ.பா.தமிழன்பன், தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பாளா் சிவ.கோ, உலகத் தமிழ்க்கழக குத்தாலம் பொறுப்பாளா் வாய்மை.இளஞ்சேரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

தொடா்ந்து, முத்தமிழ் அறிவியல் மன்ற தலைவா் ஜெ.நடராஜன் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில், நல்லாசிரியா் இரா.செல்வகுமாா், பேராசிரியை மோ.மீனாட்சி ஆகியோரும், சி.இராஜ்குமாா், பேராசிரியை துரை.சந்தானலெட்சுமி ஆகியோரும் பேசினா். தமிழ் வளா்ச்சித்துறை உதவியாளா் ஆ.லியாக்கத் அலி நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com