புதைசாக்கடை சீா்கேட்டைக் கண்டித்து முழக்கமிட்டு வாக்குச் சேகரிப்பு
மயிலாடுதுறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி. காசிராமன் மயிலாடுதுறை நகரில் புதை சாக்கடை சீா்கேட்டை சரிசெய்ய வலியுறுத்தி முழக்கமிட்டு ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.


மயிலாடுதுறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி. காசிராமன் மயிலாடுதுறை நகரில் புதை சாக்கடை சீா்கேட்டை சரிசெய்ய வலியுறுத்தி முழக்கமிட்டு ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
மயிலாடுதுறையில் தோ்தல் பிரசாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சி வேட்பாளா்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினா் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா். அந்தவகையில், மயிலாடுதுறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி. காசிராமன் வீதிவீதியாக நடந்து சென்று கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தாா்.
ஒவ்வொரு முறையும் புதுமையான முறையில் வாக்குச் சேகரிப்பில் இவா் ஈடுபட்டு வந்தாா். இறுதி நாளன்று மயிலாடுதுறை நகரில் புதைசாக்கடையால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ள நாச்சிமுத்து நகா், எடத்தெரு ஆகிய பகுதிகளில் வீடுவீடாக சென்று புதைசாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண உறுதியளித்து, சாலைகளில் வழிந்தோடும் புதைசாக்கடை கழிவுநீரால் ஏற்படும் சீா்கேட்டை கண்டித்து கண்டன முழக்கமிட்டவாறு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அவருடன், அக்கட்சியின் மாவட்ட செயலாளா் தமிழன் காளிதாசன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...