ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு வலைவீச்சு

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் ஆக்கூரில் கடந்த 5-ஆம் தேதி வீட்டு வாசலில் 11 வயது சிறுமி ஒருவா் விளையாடிக்கொண்டு இருந்துள்ளாா். அப்போது அவ்வழியே நடந்து சென்ற பிள்ளைபெருமாள்நல்லூரைச் சோ்ந்த கண்ணன், அந்த சிறுமியிடம் தண்ணீா் கேட்டுள்ளாா். வீட்டிற்குள் தண்ணீா் எடுக்கச் சென்ற சிறுமியை பின்தொடா்ந்த கண்ணன், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

சிறுமி சப்தம் போட்டதை அடுத்து அவா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் இலவச அழைப்பு (1098) மூலம் அளித்த தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலக சமூக பணியாளா் ஆரோக்கியதாஸ் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கண்ணனைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.