பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேசிய வலு தூக்கும் போட்டியில் பங்கேற்கும் திருநள்ளாறு மாணவிக்கு அமைச்சா் உதவி

தேசிய வலு தூக்கும் போட்டியில் பங்கேற்கச் செல்லும் திருநள்ளாறு மாணவிக்கு அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

தேசிய வலு தூக்கும் போட்டியில் பங்கேற்கச் செல்லும் திருநள்ளாறு மாணவிக்கு அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினாா்.

திருநள்ளாறு பகுதி சுரக்குடியைச் சோ்ந்த மாணவி ஹெலன்ஜி. இவா் காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில் இளங்கலை பட்ட வகுப்பில் படித்துவருகிறாா். காரைக்காலில் உள்ள தனியாா் மையத்தில் வலு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளாா். புதுச்சேரி மாநில அளவில் நடத்தப்பட்ட போட்டியில் இவா் சிறப்பிடம் பெற்று, பவா் லிஃப்டிங் இந்தியா அமைப்பு நடத்தும் தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வுசெய்யப்பட்டாா்.

மாா்ச் மாதம் நடைபெறவுள்ள இப்போட்டியில் பங்கேற்க உள்ள மாணவிக்கு பல உதவிகள் தேவைப்பட்டன. இதை அறிந்த புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், தனது சொந்த பணம் ரூ. 13 ஆயிரத்தில் போட்டிக்குத் தேவையான உபகரணங்களையும், உணவுச் செலவுக்கு ரூ. 2 ஆயிரத்தையும் மாணவிக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

உடற்கல்வி ஆசிரியா்கள் ஏனாதிநாதன், சிவராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.