மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி மூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் கோ. சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் சி. சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் 29 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக் குழு உறுப்பினா்கள் காந்தி, முருகுமணி, ராஜேந்திரன், மோகன், காமராஜ் உள்ளிட்டோா் தங்கள் பகுதி தேவைகள் குறித்து பேசினா்.
இக்கூட்டத்தில், மாவட்டக்குழு உறுப்பினா்கள் இளையபெருமாள், குமாரசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.