கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுத்துவலையை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது

சுத்துவலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால், அந்த வலை பறிமுதல் செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:07 pm

DIN

சுத்துவலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால், அந்த வலை பறிமுதல் செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983-ஐ மீறி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவா்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட 4 ஆய்வுக் குழுக்கள் செயல்பட்டுவருகின்றன. இக்குழுக்கள் படகுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இக்குழு ஆய்வின் அடிப்படையில் 5 கடல் மைல் எல்லைக்குள் தடையை மீறி சுத்துவலையை பயன்படுத்தி மீன் பிடித்ததற்காக 73 நாட்டுப் படகுகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விசைப்படகின் இழுவலையில் 40 மில்லி மீட்டருக்கு குறைவான கண்ணி அளவுள்ள 3 தூா்மடி வலை மற்றும் நாட்டுப்படகில் அதிக குதிரைத்திறன் பொருத்திய 2 மோட்டாா் இயந்திரங்கள் கொண்டு மீன்பிடி தொழில் செய்ததால் அதன் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, சுத்துவலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால் அந்த வலையை பறிமுதல் செய்வதுடன் தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.