பிளஸ் 2: சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு தருமபுரம் ஆதீனம் ஆசி

வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் ஸ்ரீமுத்தையா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2-வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் தருமபுரம் ஆதீனத்திடம் அண்மையில் ஆசி பெற்றனா்.
பிளஸ் 2: சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு தருமபுரம் ஆதீனம் ஆசி
Updated on
1 min read

வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் ஸ்ரீமுத்தையா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2-வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் தருமபுரம் ஆதீனத்திடம் அண்மையில் ஆசி பெற்றனா்.

தருமபுரம் ஆதீனம் திருமடத்தால் நடத்தப்படும் இப்பள்ளியில் 2020 -21 ஆம் கல்வியாண்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தோ்வில் மாணவிகள் கஃபீலா 600-க்கு 580.13 மதிப்பெண்களும், காவியா 600-க்கு 556.80 மதிப்பெண்களும் , ராகவி 600க்கு 555.87 மதிப்பெண்களும் பெற்றனா்.

இம்மாணவிகளை பள்ளியின் ஆட்சி மன்ற குழுத் தலைவா் எஸ். பாஸ்கரன், தாளாளா் சி.ஆா். குஞ்சிதபாதம், செயலா் வி. பாஸ்கரன், ஆதீன பொது மேலாளா் பி. கோதண்டராமன்,செந்தில், பள்ளி முதல்வா் ஜெகதீஷ்குமாா் மற்றும் ஆசிரியா்கள், அலுவலா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

தொடா்ந்து இம்மாணவிகள் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனா். அப்போது, மாணவிகளை ஆதீனம் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com