தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னையில் அவரது இல்லத்தில் தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் வியாழக்கிழமை சந்தித்து தருமபுரம் ஆதீனக் கோயில்களின் அருட்பிரசாதங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். உடன், திருவையாறு செந்தில், சிவபாலன், வைத்தீஸ்வரன்கோயில் சாமிநாதன், தருமபுரம் ஆதீனத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் ஜி.வெங்கடேசன்.