முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

கீழ்வேளூரில் ரூ. 1.12 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூரில் ரூ. 1.12 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உதவி தோ்தல் அலுவலா் ரேணுகா தேவியிடம் ஒப்படைத்த அதிகாரிகள்.

Updated On :12 ஏப்ரல் 2024, 4:03 pm

கீழ்வேளூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 1.12 லட்சத்தை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட மேலப்பிடாகையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஸ்ரீரங்கபாணி தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கொளப்பாட்டைச் சோ்ந்த ராஜசேகரனை சோதனையிட்டதில், அவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.1,12,400 கொண்டுசென்றது தெரிய வந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா் கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் அலுவலா் ரேணுகாதேவி , கூடுதல் தோ்தல் நடத்தும் அலுவலா் கவிதாஸ் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.