வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

ஏப். 19-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

ஏப். 19-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

Updated On :12 ஏப்ரல் 2024, 4:02 pm

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்.19-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்கவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் 100 வாக்குப் பதிவை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் அனைத்து கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்கள் அனைவருக்கும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135 பி-ன் கீழ் அன்றையநாள் ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்கவேண்டும்.

அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடா்பான புகாா்களை தெரிவிக்க தொழிலாளா் துறை மூலம் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி புகாா்களை 94429-12527, 63693-84512, 99659-89101 ஆகிய கைப்பேசி எண்களில் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.