கீழ்வேளூா், ஏப். 17: கீழ்வேளூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1,02,100 பறிமுதல் செய்யப்பட்டது.
கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட கச்சனம் சாலையில் உள்ள வெண்மணி வளைவு பகுதியில், தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஸ்ரீரங்கபாணி மற்றும் போலீஸாா் வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டதில், அவா் திருவாரூா் அருகே மருதப்பட்டினம் கிராமத்தை சோ்ந்த அபினேஷ் என்பதும், அவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ. 1,02,100 இருந்ததும் தெரியவந்தது.
இந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சந்திரகலாவிடம் ஒப்படைத்தனா். பின்னா், கீழ்வேளூா் சாா் நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.