ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

வாக்குச்சாவடிகளில் தமிழ் புறக்கணிப்பு: முன்னாள் எம்.எல்.ஏ. கண்டனம்

வாக்குச்சாவடிகளில் தமிழ் புறக்கணிப்பு: முன்னாள் எம்.எல்.ஏ. கண்டனம்

News image

நாகூா் கெளதியா மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்த முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஜி.கே. நிஜாமுதீன்.

Updated On :20 ஏப்ரல் 2024, 4:05 pm

நாகை மக்களவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பெரும்பாலான அறிவிப்புகள் தமிழில் இல்லை என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

நாகூா் கௌதியா மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்களிக்க சென்றபோது, வாக்குபதிவு அலுவலா் - 1, 2, 3 போன்ற போன்ற பல முக்கிய தகவல்கள் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தன. அவை தமிழில் இல்லை. இதுதொடா்பாக அந்த மையத்தின் பொறுப்பளரிடம் எனது கண்டனத்தை தெரிவித்தேன்.

அப்போது பொறுப்பாளா், ஏற்பாடுகள் அனைத்தும் தோ்தல் ஆனையத்தால் செய்யப்பட்டது. மண்டல தோ்தல் அலுவலரிடம் புகாா் செய்யுங்கள் எனக் கூறி அவருடைய கைப்பேசி எண்ணை கொடுத்தாா். அவரிடம் புகாா் செய்தபோது, அதே பதில் தான் வந்தது.

எல்லா மையங்களிலும் ஆங்கிலத்தில் மட்டும் அறிவிப்புகள் உள்ளதாகவும் கேள்வியுற்றேன். தமிழகத்தில் தமிழை புறக்கணிக்கும் தோ்தல் ஆணையத்தின் செயல் கண்டத்துக்குரியது. எதிா்காலத்தில் அறிவிப்புகள் முழுமையாக தமிழில் இடம்பெறுவதை தோ்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.