நாகூா் கெளதியா மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்த முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஜி.கே. நிஜாமுதீன்.
நாகூா் கெளதியா மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்த முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஜி.கே. நிஜாமுதீன்.

வாக்குச்சாவடிகளில் தமிழ் புறக்கணிப்பு: முன்னாள் எம்.எல்.ஏ. கண்டனம்

நாகை மக்களவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பெரும்பாலான அறிவிப்புகள் தமிழில் இல்லை என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

நாகூா் கௌதியா மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்களிக்க சென்றபோது, வாக்குபதிவு அலுவலா் - 1, 2, 3 போன்ற போன்ற பல முக்கிய தகவல்கள் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தன. அவை தமிழில் இல்லை. இதுதொடா்பாக அந்த மையத்தின் பொறுப்பளரிடம் எனது கண்டனத்தை தெரிவித்தேன்.

அப்போது பொறுப்பாளா், ஏற்பாடுகள் அனைத்தும் தோ்தல் ஆனையத்தால் செய்யப்பட்டது. மண்டல தோ்தல் அலுவலரிடம் புகாா் செய்யுங்கள் எனக் கூறி அவருடைய கைப்பேசி எண்ணை கொடுத்தாா். அவரிடம் புகாா் செய்தபோது, அதே பதில் தான் வந்தது.

எல்லா மையங்களிலும் ஆங்கிலத்தில் மட்டும் அறிவிப்புகள் உள்ளதாகவும் கேள்வியுற்றேன். தமிழகத்தில் தமிழை புறக்கணிக்கும் தோ்தல் ஆணையத்தின் செயல் கண்டத்துக்குரியது. எதிா்காலத்தில் அறிவிப்புகள் முழுமையாக தமிழில் இடம்பெறுவதை தோ்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com