தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணவா் கைது

குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணவா் கைது

Updated On :26 ஏப்ரல் 2024, 3:50 pm

கீழையூா் அருகே குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணவா் கைது வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

காமேஸ்வரம் ஊராட்சி தாண்டவமூா்த்திகாடு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (39). விவசாய கூலி வேலை செய்து வரும் இவருக்கு குடிபழக்கம் உள்ளதாம். இதனால், மனைவி எழிலரசி அவ்வபோது தாக்கிவந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை போதையில் வீட்டுக்கு வந்த கிருஷ்ணமூா்த்தி மனைவியை கடுமையாக தாக்கியதில் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணமூா்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.