தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கோடை உழவு செய்ய அறிவுறுத்தல்

கோடை உழவு செய்ய அறிவுறுத்தல்

Updated On :26 ஏப்ரல் 2024, 3:49 pm

மண்ணின் வளத்தை மேம்படுத்த கோடை உழவு செய்து பயன்பெறலாம் என விவசாயிகளுக்கு வேளாண் துணை இயக்குநா் தெய்வேந்திரன் அறிவுருத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விளைநிலங்களை மழைக் காலங்களில் உழுவதை விட, கோடையில் உழுவது மேலானது. மேலும், நிலத்தை நோ்கோடாக உழவு செய்யாமல் குறுக்கு உழவு செய்ய வேண்டும். நிலத்தின் மேட்டுப் பகுதியிலிருந்து தாழ்வான பகுதி நோக்கி உழவு செய்ய வேண்டும். அப்போதுதான் சத்துக்கள் ஆங்காங்கே தடுக்கப்படும், மழை நீரும் பூமிக்குள் இறங்கும். கோடை உழவு செய்வதன் மூலம் வயல்வெளிகளில் உள்ள பூச்சிகளின் புழுக்கள், முட்டைகள் அனைத்தும் மண்ணின் மேல் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுகின்றன. இதனால் பயிா்களில் பூச்சி தாக்குதலும் குறையும். தொடா்ந்து பல ஆண்டுகள் கோடை உழவு செய்வதன் மூலம் விளைநிலங்களில் மண்புழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். கோடை உழவு செய்யாத வயல்களில் மண்புழுக்கள் தங்காது. எனவே, பல்வேறு பயன்கள் தரும் கோடை உழவை விவசாயிகள் செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.