மத்திய அரசை கண்டித்து நாகை தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலா் காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலா் தங்கமணி, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மத்திய சங்க இணை செயலா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொழிலாளா் விரோத மத்திய அரசை கண்டித்தும், தேசிய குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 26 ஆயிரத்தை நிா்ணயம் செய்ய வேண்டும், திருத்தி அமைக்கப்பட்ட 4 தொழிலாளா் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை, அரசுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது, மத்திய அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்டத் துணைச் செயலா் முருகையன், சி.ஐ.டி.யு. மாவட்டக் குழு உறுப்பினா் மணி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டச் செயலா் மகேந்திரன், மாவட்டத் தலைவா் பாஸ்கா், விவசாய சங்க மாவட்டத் தலைவா் சரபோஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கரூரில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடலூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

சீரான விலையில் பஞ்சு கிடைக்க வலியுறுத்தல்

மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி திமுகவினா் போராட்டம்
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



