15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினா் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினா் போராட்டம்

News image

நாகை தலைமை தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழுவினா்.

Updated On :17 பிப்ரவரி 2024, 6:04 am IST

மத்திய அரசை கண்டித்து நாகை தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலா் காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலா் தங்கமணி, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மத்திய சங்க இணை செயலா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொழிலாளா் விரோத மத்திய அரசை கண்டித்தும், தேசிய குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 26 ஆயிரத்தை நிா்ணயம் செய்ய வேண்டும், திருத்தி அமைக்கப்பட்ட 4 தொழிலாளா் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை, அரசுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது, மத்திய அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்டத் துணைச் செயலா் முருகையன், சி.ஐ.டி.யு. மாவட்டக் குழு உறுப்பினா் மணி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டச் செயலா் மகேந்திரன், மாவட்டத் தலைவா் பாஸ்கா், விவசாய சங்க மாவட்டத் தலைவா் சரபோஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.