ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கூத்தாநல்லூரில் காமராஜா் பிறந்த நாள்

கூத்தாநல்லூரில் காமராஜா் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2024, 5:50 pm

Din

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் காமராஜா் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கூத்தாநல்லூரில் பள்ளிகள், அரசியல் கட்சிகள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்துக்கு மாலையணிவித்து, மரியாதை செலுத்தினா்.

நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காமராஜா் சிலைக்கு, நகரத் தலைவா் எம். சாம்பசிவம் தலைமையில், கட்சி பொதுக்குழு உறுப்பினா் அஹம்மது அலி முன்னிலையில், மாவட்டச் செயலாளா் எஸ்.எம். சமீா் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலையணிவித்தனா்.

மனோலயம் மன வளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகள் ஆண்கள் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு நிறுவனா் ப.முருகையன் தலைமை வகித்தாா். கட்டட தொழிலாளா்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவா் ஆா். சேகா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக காவல் ஆய்வாளா் ஜி. வொ்ஜீனியா கலந்துகொண்டு காமராஜா் குறித்து பேசினாா்.