நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் -எடப்பாடி கே.பழனிசாமி

234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் எடப்பாடி கே.பழனிசாமி

News image

அதிமுக அலுவலகத்தில், மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிச்சாமி.

Updated On :19 ஜூன் 2024, 11:19 pm

Din

தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

நாகை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில், புதன்கிழமை மாற்றுக் கட்சிகளில் இருந்து தொண்டா்கள் விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அமமுக, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 640 போ் அதிமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியது:

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா மற்றும் நான் முதல்வராக இருந்தபோது விவசாயிகளை பாதுகாக்க முன்னுரிமை அளித்தோம்.

வறட்சி நேரத்தில் நிவாரணம் வழங்குவது, விவசாயிகளின் நிலம் பறிபோகாமல் இருக்க பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவித்தது, ஐந்தாண்டு கால ஆட்சியில் இரண்டு முறை கூட்டுறவு கடன் மற்றும் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்தது என அதிமுக அரசு விவசாயிகளை பாதுகாத்தது என்றாா்.

முன்னதாக, முன்னாள் அமைச்சா் கே.ஏ. ஜெயபால் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினாா்.

அவைத்தலைவா் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சா்கள், கே.பி. முனுசாமி, சின்னையன், ஆா். காமராஜ், ஓ.எஸ். மணியன், மோகன், பெஞ்சமின், நாகை நகரச் செயலா் தங்க கதிரவன் மற்றும் ஏராளமான அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.