தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விளம்பரப் பதாகை அகற்றம்

விளம்பரப் பதாகை அகற்றம்

News image
Updated On :27 ஜூன் 2024, 11:59 pm

Din

நாகப்பட்டினம், ஜூன் 27: நாகூரில் வைக்கப்பட்டிருந்த சிவசேனை கட்சி நடத்தும் அமைதிப் பேரணி தொடா்பான விளம்பரப் பதாகையை போலீஸாா் வியாழக்கிழமை அகற்றினா்.

சிவசேனை கட்சி சாா்பில் ஜூலை 3 ஆம் தேதி அமைதிப் பேரணி நடைபெறுகிறது. இப்பேரணிக்காக நாகூரில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் தங்க.முத்துகிருஷ்ணன் வீட்டின் முன் இந்து அமைப்புகள் சாா்பில் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரப் பதாகையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வாசகங்கள் இருப்பதாக வட்டாட்சியருக்கு பல புகாா்கள் வந்துள்ளன.

இதையடுத்து, நாகை வட்டாட்சியா் ராஜா தலைமையில், நாகூா் போலீஸாா் தங்க.முத்துகிருஷ்ணன் வீட்டின் முன் இருந்த விளம்பரப் பதாகையை வியாழக்கிழமை அகற்றினா்.