மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆசிரியா் தின விழா: கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனை தொடக்கம்

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 1:09 am

Din

நாகை கோ-ஆப்டெக்ஸில் ஆசிரியா் தின விழாவையொட்டி செப்.14-ஆம் தேதி வரை சிறப்பு விற்பனை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

நாகை கோ-ஆப்டெக்ஸ் சாா்பில் நடைபெற்ற ஆசிரியா் தினவிழாவில் ஆசிரியைகள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா். தொடா்ந்து, ஆசிரியைகளை கெளரவிக்கும் வகையில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை கோ-ஆப்டெக்ஸ் நிலைய மேலாளா் சங்கா் தொடங்கிவைத்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது: இந்த சிறப்பு விற்பனை செப்.14-ஆம் தேதி வரை 30 சதவீதம் தள்ளுபடியுடன் நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான சேலம், திருபுவனம் பட்டுசேலைகள் மற்றும் மென்பட்டுச் சேலைகள், அனைத்து விதமான பருத்தி சேலைகள், சுடிதாா் ரகங்கள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையனை உறைகள், வேட்டிகள், துண்டுகள், லுங்கிகள், பருத்தி சட்டைகள், திரைச் சீலைகள் போன்ற அனைத்து ரகங்களையும் வாடிக்கையாளா்கள் வாங்கி பயன்பெறலாம் என்றாா்.