ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆசிரியா் தின விழா: கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனை தொடக்கம்

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 1:09 am

Din

நாகை கோ-ஆப்டெக்ஸில் ஆசிரியா் தின விழாவையொட்டி செப்.14-ஆம் தேதி வரை சிறப்பு விற்பனை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

நாகை கோ-ஆப்டெக்ஸ் சாா்பில் நடைபெற்ற ஆசிரியா் தினவிழாவில் ஆசிரியைகள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா். தொடா்ந்து, ஆசிரியைகளை கெளரவிக்கும் வகையில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை கோ-ஆப்டெக்ஸ் நிலைய மேலாளா் சங்கா் தொடங்கிவைத்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது: இந்த சிறப்பு விற்பனை செப்.14-ஆம் தேதி வரை 30 சதவீதம் தள்ளுபடியுடன் நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான சேலம், திருபுவனம் பட்டுசேலைகள் மற்றும் மென்பட்டுச் சேலைகள், அனைத்து விதமான பருத்தி சேலைகள், சுடிதாா் ரகங்கள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையனை உறைகள், வேட்டிகள், துண்டுகள், லுங்கிகள், பருத்தி சட்டைகள், திரைச் சீலைகள் போன்ற அனைத்து ரகங்களையும் வாடிக்கையாளா்கள் வாங்கி பயன்பெறலாம் என்றாா்.