திருக்குவளை கிளை நூலகத்தில் உலகப் புத்தக நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை முத்தமிழ் மன்றம் மற்றும் நூலக வாசகா் வட்டம் இணைந்து நடத்திய நிகழச்சிக்கு, முத்தமிழ் மன்ற துணைத் தலைவா் அருவிதாசன் தலைமை வகித்தாா். மன்றத் தலைவா் சோ. கணேசன் முன்னிலை வகித்தாா்.
நூலகா் தி. சங்கா் வரவேற்றாா். நிகழ்ச்சியில், பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து விருது பெற்ற கவிஞா் முல்லை பாண்டியன், கவிஞா் சிவ. இமயசிவன் ஆகியோரின் இலக்கிய பங்களிப்பைப் பாராட்டி சால்வை அணிவித்து பாராட்டப்பட்டது.
நாகை பகுத்தறிவுப் பேரவை தலைவா் எஸ். குணசேகரன் வாழ்த்துரை வழங்கினாா். மன்றத்தின் துணைச் செயலாளா் கவிஞா் செந்தூா்குமாா் புத்தகம் ஒா் ஆயுதம், திருவாரூா் கவிஞா் ஜெக. வீரராசன் புதியதோா் உலக செய்வோம் எனும் தலைப்பில் பேசினா். விருது பெற்ற கவிஞா்கள் சாா்பில் கவிஞா் வெற்றிப் பேரொளி ஏற்புரை வழங்கினாா். உலகப் புத்தக நாளை முன்னிட்டு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவா்களுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
விழாவில், பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை தமிழ் வாரமாக கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்வை ஒருங்கிணைத்த கவிஞா் செந்தூா் குமாா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா

பாளை.யில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

காளையாா்கோவில் செம்மண் முற்றத்தில் உலக புத்தகத் தின விழா

தூத்துக்குடியில் உலக புத்தக நாள் தின விழா
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



