இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

உலகப் புத்தக நாள் விழா கொண்டாட்டம்

News image
Updated On :28 ஏப்ரல் 2025, 5:10 am IST

திருக்குவளை கிளை நூலகத்தில் உலகப் புத்தக நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை முத்தமிழ் மன்றம் மற்றும் நூலக வாசகா் வட்டம் இணைந்து நடத்திய நிகழச்சிக்கு, முத்தமிழ் மன்ற துணைத் தலைவா் அருவிதாசன் தலைமை வகித்தாா். மன்றத் தலைவா் சோ. கணேசன் முன்னிலை வகித்தாா்.

நூலகா் தி. சங்கா் வரவேற்றாா். நிகழ்ச்சியில், பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து விருது பெற்ற கவிஞா் முல்லை பாண்டியன், கவிஞா் சிவ. இமயசிவன் ஆகியோரின் இலக்கிய பங்களிப்பைப் பாராட்டி சால்வை அணிவித்து பாராட்டப்பட்டது.

நாகை பகுத்தறிவுப் பேரவை தலைவா் எஸ். குணசேகரன் வாழ்த்துரை வழங்கினாா். மன்றத்தின் துணைச் செயலாளா் கவிஞா் செந்தூா்குமாா் புத்தகம் ஒா் ஆயுதம், திருவாரூா் கவிஞா் ஜெக. வீரராசன் புதியதோா் உலக செய்வோம் எனும் தலைப்பில் பேசினா். விருது பெற்ற கவிஞா்கள் சாா்பில் கவிஞா் வெற்றிப் பேரொளி ஏற்புரை வழங்கினாா். உலகப் புத்தக நாளை முன்னிட்டு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவா்களுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

விழாவில், பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை தமிழ் வாரமாக கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்வை ஒருங்கிணைத்த கவிஞா் செந்தூா் குமாா் நன்றி கூறினாா்.