திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வேளாங்கண்ணியில் ரூ. 6 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 3 போ் கைது

வேளாங்கண்ணியில் ரூ. 6 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2025, 8:39 pm

Syndication

வேளாங்கண்ணியில் ரூ. 6 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகையிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு விலை உயா்ந்த போதைப்பொருள்கள் கடத்துவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸாருக்கு சனிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து வேளாங்கண்ணிக்கு சென்றனா். பேராலய காா் நிறுத்தும் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா்.

இதில், வெளிப்பாளையம் புதிய நம்பியாா் நகரைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (40), மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் சுனாமி குடியிருப்பு மீனவா் காலனியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (33), வேதாரண்யம் தும்மாச்சி பகுதியை சோ்ந்த முருகன் (எ) காஞ்சிநாதன் (31) என்பதும், அவா்கள் மெஸ்கலின் என்ற போதைப் பொருள் 2 கிலோ வைத்திருந்ததும், அதை இலங்கைக்கு படகு மூலம் கடல் வழியாக கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த 3 பேரை தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸாா் கைது செய்து போதைப் பொருளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அந்த போதைப் பொருளின் மதிப்பு ரூ.6 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.