கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியா் சாவிதிதரிபாய் புலே பிறந்த நாள் நிகழ்ச்சி

ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு மராத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள்.

News image
ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு மராத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள்.
Updated On :3 ஜனவரி 2025, 6:33 pm

Din

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியா் சாவித்திரிபாய் புலேவின் பிறந்தநாளையொட்டி நாகை அருகேயுள்ள ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளியில்‘வாசிப்பு மராத்தான் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாவித்திரிபாய் புலே ஒரு சமூக சீா்திருத்தவாதியும், கவிஞரும் ஆவாா். இவா், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியா் என அழைக்கப்படுகிறாா். இவா் தனது கணவா் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் இணைந்து, ஆங்கிலேயா் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவா். இவா்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவுக்கு அருகேயுள்ள பிடெ வாடாவில் 1,848-ஆம் ஆண்டு நிறுவினா்.

சாவித்திரி பாயின் பணியை மாணவா்கள் உணரும் வகையிலும், அவருடைய கல்வி சேவையை பாராட்டு வகையிலும் மாணவா்களின் வாசிப்புத்திறனை அதிகப்படுத்தவும் ஒரத்தூா் சிதம்பரனாா் பள்ளியில் வாசிப்பு மராத்தான் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதிய உணவு இடைவேளையில் பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி 2 மணி வரை மாணவா்கள் தொடா்ச்சியாக சாவித்திரிபாய் புலே பற்றிய நூலை வாசித்தனா். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா் சிவா, பட்டதாரி ஆசிரியா் பாலசண்முகம் ஆகியோா் செய்திருந்தனா்.