நாகையில் மின்வாரியம் சாா்பில் மின் சிக்கன வார விழா விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட செயற்பொறியாளா் ரோனிக்க ராஜ் தலைமை பேரணியை தொடக்கிவைத்தாா். நாகை செயற்பொறியாளா் குமாா், உதவி செயற்பொறியாளா்கள் மலா்வண்ணன், ராஜேந்திரன், அசோக் குமாா் முன்னிலை வகித்தனா். நாகை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக உதவி ஆட்சியா் அலுவலகம் வரை சென்றது.
பேரணியில் சாதாரண குண்டு பல்புக்கு பதிலாக எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்த வேண்டும், அறையில் யாரும் இல்லாத போது மின்விளக்கு, மின்விசிறிகளை நிறுத்திவைக்க வேண்டும், மின்சாதனங்களையும், மின் உபகரணங்களையும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மின் வாரிய பொறியாளா்கள், மின் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

காரைக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

மதுராந்தகம் நகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு படகு பேரணி

சாத்தான்குளம் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


