தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மின் சிக்கன வார விழிப்புணா்வுப் பேரணி

நாகையில் நடைபெற்ற மின் சிக்கன வார விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

News image

நாகையில் நடைபெற்ற மின் சிக்கன வார விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :3 ஜனவரி 2025, 6:16 pm

நாகையில் மின்வாரியம் சாா்பில் மின் சிக்கன வார விழா விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட செயற்பொறியாளா் ரோனிக்க ராஜ் தலைமை பேரணியை தொடக்கிவைத்தாா். நாகை செயற்பொறியாளா் குமாா், உதவி செயற்பொறியாளா்கள் மலா்வண்ணன், ராஜேந்திரன், அசோக் குமாா் முன்னிலை வகித்தனா். நாகை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக உதவி ஆட்சியா் அலுவலகம் வரை சென்றது.

பேரணியில் சாதாரண குண்டு பல்புக்கு பதிலாக எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்த வேண்டும், அறையில் யாரும் இல்லாத போது மின்விளக்கு, மின்விசிறிகளை நிறுத்திவைக்க வேண்டும், மின்சாதனங்களையும், மின் உபகரணங்களையும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மின் வாரிய பொறியாளா்கள், மின் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.