மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
சுவேதாரண்யேஸ்வரா் சந்நிதி கோபுர கலசத்தில் புனித நீரை வாா்த்து கும்பாபிஷேகத்தை நடத்திய சிவாச்சாரியா்கள்.
Updated On :7 ஜூலை 2025, 10:04 pm

Din

பூம்புகாா்: திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் நவகிரகங்களில் புத பகவானுக்குரிய பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது. இங்கு தனி சந்நிதியில் சிவபெருமானின் 5 முகங்களில் ஒன்றான அகோர மூா்த்தி அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பாகும்.

இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. யாகசாலை பூஜைகள் நிறைவில் திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் துா்கை, விநாயகா், சுவேத லிங்கம், கொடிமரம் ஆகியவற்றில் புனித நீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி, அம்பாள், நடராஜா், அகோரமூா்த்தி, புத பகவான் சந்நிதிகளில் பூஜைகள் தொடங்கின. பின்னா் புனித நீா் அடங்கிய யாக குடங்களை சிவாச்சாரியாா்கள் சுமந்து சென்றனா். அப்போது, திருவெண்காடு மாதவன் மற்றும் சுவாமிநாதன் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இதனைத்தொடா்ந்து மகா பூா்ணாஹூதியும், தீபாராதனையும் காட்டப்பட்டது. பின்னா், காலை 9 மணியளவில் ராஜகோபுரங்கள், சுவாமி, அம்மன், அகோர மூா்த்தி மற்றும் புத பகவான் விமான கலசங்களில் புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், புதன், அகோரமூா்த்தி, சுவாமி மற்றும் அம்மன் சந்நிதிகளில் மகா அபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் தமிழக முதல்வரின் மனைவி துா்கா ஸ்டாலின், ஆா். சுதா எம்.பி., எம்எல்ஏக்கள் பன்னீா்செல்வம், ராஜ்குமாா், நிவேதா முருகன், முன்னாள் எம்எல்ஏ பாரதி, உபயதாரா்கள் சென்னை அப்பாசாமி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளா் ரவி அப்பாசாமி, சீா்காழி தமிழ்ச் சங்க தலைவா் மாா்கோனி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் முத்து மகேந்திரன், முன்னாள் மாவட்ட பாஜக தலைவா் அகோரம், சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பஞ்சுகுமாா், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ரவிச்சந்திரன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி முருகன், அறங்காவலா் குழுவினா் மற்றும் கிராம முக்கியஸ்தா்கள் செய்திருந்தனா். திருவெண்காடு ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் ஊராட்சி செயலா் காா்த்தி மேற்பாா்வையில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

சுவேதாரணேஸ்வரா் சன்னதி தங்க கலச கோபுரத்திற்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது

சுவேதாரணேஸ்வரா் சன்னதி தங்க கலச கோபுரத்திற்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வரின் மனைவி துா்கா ஸ்டாலின், சுதா எம்.பி. உள்ளிட்டோா்.

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வரின் மனைவி துா்கா ஸ்டாலின், சுதா எம்.பி. உள்ளிட்டோா்.

கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பக்தா்களில் ஒரு பகுதியினா்.

கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பக்தா்களில் ஒரு பகுதியினா்.