இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

மீனவா்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்

செருதூா் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

செருதூா் மீன்பிடித் துறைமுகப் பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.

Updated On :5 மே 2025, 10:01 pm IST

திருக்குவளை: இலங்கை கடற்கொள்ளையா்களால் நாகை மாவட்ட மீனவா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, செருதூா் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை, செருதூா், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5 படகுகளில் கடந்த மே 2-ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் 20-க்கும் மேற்பட்டோா், கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் வெவ்வேறு இடங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, இலங்கை படகுகளில் வந்த கடற்கொள்ளையா்கள், தமிழக மீனவா்களை ஆயுதங்களால் தாக்கி, பல லட்சம் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களை பறித்துச் சென்றனா். தாக்குதலில் காயமடைந்த மீனவா்கள், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், இலங்கை கடற்கொள்ளையா்களின் தாக்குதலை கண்டித்து, செருதூா் மீனவா்கள் கடந்த 3 நாள்களாக தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால், அப்பகுதியில் உள்ள சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஃபைபா் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, செருதூா் மீன்பிடித் துறைமுகத்தில், மீனவா்களுக்கு பாதுகாப்புக் கோரி திங்கள்கிழமை மீனவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறியது:

மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், இலங்கை கடற்கொள்ளையா்கள் வலைகள், என்ஜின், ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டனா். பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல் நடத்தாமல் இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவா்களின் பாதுகாப்பை இந்தியா மற்றும் இலங்கை இரு நாடுகளும் உறுதிசெய்ய வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை கடற்கொள்ளையா்களின் அட்டூழியத்தால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றனா்.