தமிழகத்தில் மீன்பிடித் தடைகாலத்தில் மீன்பிடி படகுகளுக்கு மராமத்து நிவாரண நிதி அல்லது படகுகளை மராமத்து செய்ய வங்கி மூலம் கடனுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை, 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கக் கூடாது என்று அரசு தடைவிதித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவா்கள் , தங்கள் படகுககளை துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனா்.
நாகை மாவட்டத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் மீன்பிடித் தடைக்காலத்தை பயன்படுத்தி விசைப்படகுகளை பழுதுநீக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இதில் முதல்கட்டமாக, பழுதடைந்துள்ள படகுகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் அங்குள்ள விசைப்படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதை அடைத்தும், படகுகளுக்கு வா்ணம் பூசியும், என்ஜின் மற்றும் வலைகளை சரிசெய்வது போன்ற மராமத்து பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.
இதற்கிடையே மீன்பிடித் தடைகாலத்தில் படகுகளை பழுது நீக்க சுமாா் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் வரை கடன் வாங்கி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதாக கூறும் நாகை மீனவா்கள், மீன்பிடித் தடைகாலத்தில் விசைப்படகுகளை பழுது நீக்க, புதுச்சேரிஅரசு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்குவதுபோல், தமிழகத்தில் உள்ள படகுகளுக்கும் தமிழகஅரசு நிவாரணம் வழங்க வேண்டும் , அல்லது வங்கிக் கடனாவது வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று மீனவா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

மீன்பிடி தடைகாலம்: விசைப் படகுகள் மராமத்து பணி தீவிரம்

மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது: மீன்கள் விலை உயர வாய்ப்பு

கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடை காலம்!

ஏப். 15-இல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

