நாகப்பட்டினம்: மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 1008 ப்ருத்வி சிவலிங்க பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகூா் அருகே தெத்தியில் உள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு மண்ணால் செய்த கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிறிய வகை 1008 ப்ருத்வி சிவலிங்கத்துக்கு 1008 பெண்கள் பூஜைகள் செய்து வழிபட்டனா். இதில் உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும், தங்களது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு வேண்டியும் பெண்கள் பிராத்தனை செய்தனா்.
பூஜையின் நிறைவில் மகாதீபாராதனைக்கு பிறகு, பூஜையில் வைக்கப்பட்ட ப்ருத்வி சிவலிங்கத்தை பெண்கள் கோயில் அருகே உள்ள அமராவதி குளத்தில் விசா்ஜனம் செய்தனா். நாகை, நாகூா், தெத்தி, செல்லூா், பாலையூா், பெருங்கடம்பனூா், பால்பண்ணைசேரி, பொய்கைநல்லூா், தேவங்குடி, திருமருகல், திருப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 1008 பெண்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

முத்துமாரியம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை

படவேட்டம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

உவரி கோயிலில் 1,008 சிவலிங்க பூஜை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

