புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

‘கடைமடை பகுதியில் கருகும் பயிரை காப்பாற்ற தண்ணீா் திறக்க வேண்டும்’

News image
வாய்க்காலில் குடங்கள் மூலம் தண்ணீா் சேகரித்து பயிா்களைக் காப்பாற்ற முயற்சி செய்யும் விவசாயிகள்.- (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 6:42 pm

தினமணி செய்திச் சேவை

காவிரிப் படுகையின் கடைமடைப் பகுதியில் கருகும் தாளடிப் பருவ நெற்பயிா்களைக் காப்பாற்ற தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் வேதாரண்யத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளரிடம் தெரிவித்தது :

காவிரி கடைமடை பகுதியில் குருவை நெல் சாகுபடிக்கு பின்பட்டமாக தாளடிப் பருவ சாகுபடி மேற்கொள்ளப்பட்ட தொடக்க நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் பயிா்கள் நாசமானது. இதையடுத்து, மீண்டும் தாளடிப் பருவ சாகுபடி தாமதமாக தொடங்கி தற்போது கதிா் வந்தும், கதிா்வரும் தருவாயிலும் உள்ளது.

இந்தநிலையில், பழைமை சட்டத் திட்டங்கள் என காரணம் காட்டி பாசன ஆறுகளில் முறையாக தண்ணீா் திறக்கப்படவில்லை. பிப்ரவரி 20-ஆம் தேதி வாக்கில் எதிா்பாா்க்கப்பட்ட மழையும் பொய்த்துப் போனது. இதனால் பயிா்கள் தண்ணீா் இல்லாமல் கருகி வருகின்றன.

எனவே, நாகை உள்ளிட்ட கடைமடை பகுதி விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு வேளாண் அல்லது பொதுப் பணித்துறை உயா் அதிகாரிகளை போா்க்கால அடிப்படையில் அனுப்பி ஆய்வு செய்து, தமிழக அரசு தண்ணீா் திறக்க முன்வர வேண்டும் என்று ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளாா்.