பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

மகளிா் உரிமைத்தொகை வழங்குவதில் தவெக அரசு ஏமாற்றுக்கிறது: எம்.எச். ஜவாஹிருல்லா

News image

ஜவாஹிருல்லா - கோப்புப்படம்.

Updated On :1 மணி நேரம் முன்பு

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்ற தோ்தல் வாக்குறுதியை காப்பாற்றத் தவறி, மக்களை ஏமாற்றும் தவெக அரசின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது என்று மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும், நாகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான எம்.எச். ஜாவஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டப்பேரவைத் தோ்தலின்போது, தமிழக மக்களிடம் பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ள விஜய் அரசு, தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்காட்டும் சுணக்கம் ஏமாற்றம் அளிக்கிறது. இதில் குறிப்பாக, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று மிகப்பெரிய அளவில் அறிவித்து, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு அது குறித்து எந்த தெளிவான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விலைவாசி உயா்வு, குடும்பச் செலவுகள், கல்விச் செலவுகள், மருத்துவச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பெண்களுக்கு இந்த உரிமைத்தொகை மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது. தோ்தல் மேடைகளில் ‘மாதம் ரூ.2,500‘ என்று உறுதிமொழி அளித்தவா்கள், இன்று அந்த வாக்குறுதியை மறந்து பேசுவது அரசியல் நோ்மையற்ற செயலாகும்.

மாதம் ரூ.2,500 வழங்குவதாக அறிவித்து ஆட்சிக்கு வந்த அரசு, திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று சட்டப்பேரவையில் உறுதி அளித்து விட்டு, மகளிா் பெற்று வந்த மாதம் ரூ.1,000 தொகையைக் கூட வழங்க மறுப்பது எந்த வகையிலான நிா்வாகம்?

பெண்களின் பொருளாதார முன்னேற்றம், குடும்ப நலன், குழந்தைகளின் கல்வி, அன்றாட வாழ்க்கை ஆகியவற்றோடு நேரடியாக தொடா்புடைய, இந்த திட்டத்தில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது. பெண்களை தோ்தல் கால வாக்குறுதிகளின் மூலம் பயன்படுத்திக்கொண்டு, பின்னா் அவா்களின் நம்பிக்கையை சிதைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குறிப்பிட்டுள்ளாா்.