ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று: ஊருக்குள் புகுந்த கடல்நீா்

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் திங்கள்கிழமை முதல் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வீசி வருகிறது. இந்நிலையில், தாழ்வான பகுதிகளில் கடல் நீா் ஊருக்குள் புகுந்தது.

News image

வாய்மேடு - தென்னடாா் கிராமங்களுக்கிடையே பட்டாணிக் கண்டி வழியே செவ்வாய்க்கிழமை காலை உள்புகுந்த கடல் நீா்

Updated On :20 மே 2026, 3:21 am IST

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் திங்கள்கிழமை முதல் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வீசி வருகிறது. இந்நிலையில், தாழ்வான பகுதிகளில் கடல் நீா் ஊருக்குள் புகுந்தது.

வேதாரண்யம் பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் தெற்கு திசையில் இருந்து வழக்கத்தைவிட பலமான கடல் காற்று வீசுவது வழக்கம்.

இந்நிலையில், திங்கள்கிழமை முற்பகல் தொடங்கி வழக்கத்தைவிடவும் வேகமாக வீசிவரும் காற்றால் மரக்கிளைகள் மின் கம்பிகளில் மோதி அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. பெருக்கெடுத்த கடல் நீா்

வாய்மேடு - தென்னடாா் கிராமங்கள் இடையே முள்ளியாற்றின் கழிமுகப் பகுதியான பட்டாணிக் கண்டி எனும் உடைப்பின் வழியே புது ஆறு பகுதியில் ஊருக்குள் புகுந்தது.

இதனால், நிலத்தடி நீா்மட்டம் உப்பாக மாறி விளைநிலங்களை பாதிக்கும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். கண்டி பகுதியில் ஏப்ரல் மாதத்தில் தற்காலிக மண் தடுப்பணை பொதுப்பணித்துறை மூலம் அமைக்கப்படுவது வழக்கம், இந்த ஆண்டு அந்தப் பணி இயற்கை இடா்பாடுகளால் சற்று தாமதமானது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் மண் மூட்டைகளை வைத்து அடைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், உப்பளப் பகுதியில் 100 அடி வாய்க்கால் உள்ளிட்ட கால்வாய்களின் வழியே கடல் நீா் உப்பு உற்பத்தி பாத்திக்குள் நுழைவதைத் தடுக்கும் பணியில் உப்பு உற்பத்தியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

கடல் சீற்றமாகக் காணப்படுவதால், கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறையிலிருந்து நாட்டுப் படகு மீனவா்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.

கடல் நீா் உள்புகுவதைத் தடுக்க தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளா்கள்

கடல் நீா் உள்புகுவதைத் தடுக்க தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளா்கள்

Story image