சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்க ஆட்சியரிடம் வலியுறுத்தல்

காரைக்கால் பகுதியில் உள்ள கழிப்பறைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :23 ஜூலை 2018, 5:49 am IST

காரைக்கால் பகுதியில் உள்ள கழிப்பறைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் வளர்ச்சிக் குழுத் தலைவர் பி. ராஜலட்சுமணன், செயலர் டி. வின்சென்ட்ராஜ், துணைச் செயலர் பி. ராஜேந்திரன், உறுப்பினர் பெரியார் கணபதி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவனை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். அவரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம் :
காரைக்காலில் பெரும்பாலான  அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதுமான கழிப்பறைகளின்றியும், முறையான பராமரிப்பின்றியும்  காணப்படுகிறது. இது மாணவ, மாணவியருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லூரிகளில் படிப்பு முடித்தோர் வேலைவாய்ப்பு பெறும் வகையில், திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்களை காரைக்காலில் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்கால் நகரப் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட  சாலைகளை, புதுப்பிக்கும் வகையில் போர்க்கால முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதை அமைப்புப் பணியை மத்திய அரசு தொடங்குவதற்கான பணிகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.